``பிரதமர் மோடியின் இதயம் தமிழ்நாட்டுக்காகத் துடிக்கிறது” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Gray Frame Corner

``பிரதமர் மோடியின் இதயம் தமிழ்நாட்டுக்காகத் துடித்துக்கொண்டிருக்கிறது.

Gray Frame Corner

அதற்காகவே காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என கும்பகோணம் ரயில் நிலையத்தில் பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Gray Frame Corner

சுதந்திர அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம்-2022 நிகழ்ச்சி காசியில் நடக்கிறது.

Gray Frame Corner

இதன் மூலம் காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொன்மையான நாகரிகத் தொடர்பு மீண்டும் புதுப்பிக்கக்கூடிய வகையில் டிசம்பர் 16-ம் தேதி வரை ஒரு மாத காலம் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

Gray Frame Corner

இதில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 13 ரயில்களில், சுமார் 2,500 மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

Gray Frame Corner

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அப்போது அவர், ``காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடியின் கனவு. இது முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சி.

Gray Frame Corner

எனவே, இதில் பொதுமக்களும் இணைந்து காசி தமிழ்ச் சங்கமப் பயணத்தை ஒரு வெற்றிப் பயணமாக மாற்ற வேண்டும். அது நமது கடமை. வரும் 19-ம் தேதிக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

Gray Frame Corner

இது தமிழக மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், பிரதமர் மோடி தமிழகத்தின் மீது வைத்துள்ள உணர்வைக் காட்டுகிறது. தமிழ்நாட்டுக்காக அவரின் இதயம் எப்போதும் துடித்துக்கொண்டிருக்கிறது” என்றார்.